குருநாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒன்பது மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவ ரவும வீதியில் பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தின் மீது மோதியதில்,

அதில் பயணித்த முச்சக்கரவண்டி சாரதி உட்பட நான்கு பயணிகள் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் ஒன்பது மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.