நெடுஞ்சாலை வீதியை பராமரிக்க மக்களிடம் பணம் அறவிட ஆலோசிக்கும் அரசு!

நெடுஞ்சாலை வீதியை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை அரசினால் பராமரிக்க இயலாததால் வீதி மேம்பாட்டிற்க்காக பணம் வசூலிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதற்கமைய, அதற்கு உரிய நிதியாக அரசு முதலில்  நூறு மில்லியன் ரூபாவை பயன்படுத்துமெனவும் பந்துல குணவர்தன கூறயுள்ளார்.

மேலும் இது தொடர்பான நிதிக்காக மக்களிடம் இருந்து பணம் சேகரிக்கப்படும். அது எரிபொருளின் ஊடாகவேனும் மேற்கொள்ளப்படலாம் எனவும் நேற்றைய தினம் இடம்பெற்ற அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதனை கூறியுள்ளார்