யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்

இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம்  பிற்பகல் 12.30 மணியுடன் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவ் அரை நாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்