யாழில் இன்று பேருந்து நிலையத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ! வெளியான காரணம் !

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இன்று புதன்கிழமை (08) மதியம் 12.30 மணி முதல் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இந்த அரைநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.