மட்டக்களப்பில் சிறுவனை கொடூரமாக கொலை செய்த தாயின் இரண்டாவது கணவர்!

மட்டக்களப்பில் தாயின் இரண்டாவது கணவர் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் – காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் ஒருவரால் சிறுவன் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை கடந்த 8ஆம் திகதி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை அன்றைய தினம் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (09-02-2023) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று (09) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி இன்று (10-02-2023) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.