யாழில் வீதியின் குறுக்கே இரும்பு கூட்டினை ஏற்றிச் சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிர்பாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தனது நண்பருடன் அச்சுவேலியிலிருந்து கொடிகாமத்தில் இருந்து புறப்பட்டு சாவகச்சேரி – புத்தூர் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் குறுக்கே இரும்புக் கூட்டினை ஏற்றிச் சென்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.