கடவுச் சீட்டு வழங்குவதற்கு இலஞ்சம் கோரிய அதிகாரிகள் கைது!

கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டில் நான்கு பேரை இலங்கை இலஞ்ச ஊழல்  குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச் சீட்டு வழங்குவதாக கூறி  42,000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது அதன் மூலம் கடவுச்சீட்டு பெறுவதற்காக 22,000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 20,000 ரூபாவை சந்தேகநபர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் மூன்று தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.