மின்சார சபை ஊழியர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

மின்வெட்டை மேற்கொள்ள வீடுகளுக்கு செல்லும் மின்சாரசபை ஊழியர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் வெட்டு தொடர்பில் மின்சாரசபை ஊழியர்கள் சிலருக்கு கொலை மிரடல்கள் விடப்படுவதால் உயிர் அச்சுறுத்தலுடன் அவர்கள் வேலையில் ஈடுபட முடியாது என குறிப்பிட்டுள்ளார்

மேலும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது அதற்க்கு மக்கள் ஆதரவளித்து போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் மின் வெட்டுக்கு செல்லும் தொழிலார்கள் குடியிருப்பு வாசிகளால் தாக்குதலுக்கு உள்ளாக நேரிட்டால் தொழிற்சங்கங்களாக அதில் தலையிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்