சுவிஸில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட யாழ். பெண் ! வெளியான முழு விபரம் !

சுவிட்சர்லாந்தில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 25 வருடங்களாக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு இந்த சோகத்தில் முடிந்துள்ளது.

பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற உணவகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை ஆர்கோவின் ரப்பர்ஸ்விஸ் பகுதியில் பரபரப்பான காலை வேளையில் கொல்லப்பட்டார்.

உணவு விடுதிக்குள் கத்தியுடன் நுழைந்த கணவர் மனைவியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார். பொலிசார் அங்கு சென்ற போது சந்தேகத்தின் பேரில் கணவன் எதிர்ப்பு தெரிவிக்காமல் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சுவிஸ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசுவிட்சர்லாந்தில் யாழை சேர்ந்த மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற கணவன்
Next articleமாணவர்களின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்த்தர் !