யாழ்.போதனா வைத்தியசாலையில் குடிநீரில் கிருமி தொற்று ?

யாழ் போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமிகள் கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நீர் பரிசோதனையை மேற்கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்காததுடன், ஏன் மறைத்தார்? ஜனாதிபதி ஊடகப் பிரிவு நீர் வழங்கல் அமைச்சிடம் வினவியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாதிரி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா? மாவட்ட செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், அது ரகசியமானது என்றும், அதை வெளியிட முடியாது என்றும் அந்த அதிகாரி பதிலளித்தார். எவ்வாறாயினும், இது பொதுப் பிரச்சினையே தவிர, தனியார் வீட்டுக் குடிநீர்ப் பிரச்சினை அல்ல என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரினர்.

சட்டப்பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என மேற்படி அதிகாரி பதிலளித்த போது இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அமைச்சிடம் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.