யாழில் கனடா மாப்பிள்ளைக்கு பாய் சொல்லிவிட்டு காதலனுடன் சென்ற மனைவி ! கடத்தல் நாடகம் போட்டதால் கடுப்பான பொலிஸார் !

யாழில் வாகனத்தில் வந்தவர்களால் பெண் ஒருவரை வீடு புகுந்து தூக்கிச் செல்லப்பட்ட விவகாரம் கடத்தல் அல்லவென தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தனது கணவரை கனடாவில் விட்டுவிட்டு வவுனியாவிலுள்ள தனது காதலனுடன் வாழ சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று காலை இந்த கடத்தல் நாடகம் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் நான்கு பேர் வீட்டினுள் நுழைந்து 31 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணையும் 3 வயது குழந்தையையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது அவர் எதிர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த குடும்பத்தினர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் போனுக்கு போலீசார் அழைத்தபோது, ​​தான் விரும்பியபடி காதலனுடன் செல்கிறேன் என அப்பெண் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, தம்பதியை காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, கடத்தப்பட்ட இளம் குடும்பப் பெண் வவுனியாவில் தங்கியிருந்த போது கடத்தல்காரனுடன் பழகியதாகவும், கடந்த வாரம் அந்த பெண்ணை குடும்பத்தினர் சாவகச்சேரி அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் காதலன் வவுனியாவில் இருந்து வந்து சாவகச்சேரியில் உள்ள குடும்பபெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.