மட்டக்களப்பு பகுதியில் கஞ்சாவிற்ப்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த  40 வயதுடைய பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை  அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யபட்ட நபரிடம் இருந்து  800 கிராம் நாட்டு கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை வெல்லாவெளி பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.