தனது காதலியை காதலித்த நண்பனை கொன்று இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் !

காதல் விவகாரத்தில் நண்பரின் தலையை துண்டித்து அவரது இதயத்தை வெளியே எடுத்த இந்தியர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

நேற்று (25.02.2023) பொலிஸில் சரணடைந்த பின்னர், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலையுடன் தொடர்புடைய இளைஞன், இந்தியாவின் தெலுங்கானா மாநில பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் நவீன் (வயது 22). இவரும், அதே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த ஹரி ஹர கிருஷ்ணா (வயது 21) என்ற மாணவரும் நண்பர்கள். இதற்கிடையில் நவீன் மற்றும் அவரது நண்பர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் கிருஷ்ணா இருவரும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். முதலில் நவீன் தனது காதலை மாணவியிடம் தெரிவித்தார்.

மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக நவீனும், அவரது காதலியான மாணவியும் பிரிந்தனர். இதையடுத்து மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்தினார். நவீனுடன் பிரிந்து பல மாதங்களுக்குப் பிறகு மாணவி ஹரிஹர கிருஷ்ணனின் காதலுக்கு ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் நவீன் தன்னை விட்டு பிரிந்த முன்னாள் காதலிக்கு போன் செய்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணன், காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பன் நவீனை விரட்ட முடிவு செய்தான். இதற்காக கடந்த 3 மாதங்களாக திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு ஹரிஹர கிருஷ்ணன் தனது நண்பர் நவீனை தில்சுக்நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர், நவீனை இரவு கல்லூரி விடுதியில் விடுவதற்காக ஹரிஹர கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் நவீனை அழைத்துச் சென்றார்.

வழியில் நவீன் ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் மது அருந்துகிறார்கள். குடிபோதையில் காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹரிஹர கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை கொடூரமாக தாக்கி கொன்றார்.

நவீனின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் இரண்டாக வெட்டப்பட்டு, இதயம் வெளியே எடுக்கப்பட்டது. மேலும் நவீனின் கைவிரல்களையும் வெட்டினார். ஆனால், ஆத்திரத்தை அடக்க முடியாத ஹரிஹர கிருஷ்ணன், தனது நண்பர் நவீனின் பிறப்புறுப்பையும் வெட்டினார்.

நவீனை கொடூரமாக கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணன், அந்த கொடூரத்தை புகைப்படம் எடுத்து காதலிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலை நடந்து 9 நாட்களுக்கு பிறகு ஹரிஹர கிருஷ்ணன் நேற்று போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் ஹரிஹர கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட நவீனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலிக்கு போன் செய்து துன்புறுத்தியதற்காக நண்பரை கொடூரமாக கொன்று அவரது இதயத்தை பறித்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.