யாழில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த நான்கு வயது சிறுமி

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு ஊறணி பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி மூளைக் காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

ஊறணி பகுதியினை சேர்ந்த  அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற நான்கு வயது சிறுமி கடந்த சிவராத்திரி அன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்