புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்

2500 வைத்தியர்களை புதிதாக சேவையில் இணைத்து கொள்ள இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது அதற்காக நிதி அமைச்சின் அனுமதியும் கோரப்ப்பட்டுள்ளதாக அதன் செயலாளர்  ஜனக ஸ்ரீ சந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார்.

அதனால் எதிர்காலத்தில் நாட்டில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறை நீங்கும் என குறிப்பிட்டுள்ளார் எனினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது