45 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் பன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பால் குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கி விழுந்ததையடுத்து பெற்றோர்கள் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் குழந்தை இறந்தது.
குழந்தையின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக பிரேத பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.