லொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக கூறி உங்களுக்கு தொலைபேசி அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ வாட்ஸ்அப் மூலம் வந்தால் அது மோசடியாகும் போலியான தகவல் ஒன்றாகும் என இலங்கையின் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இவாறான மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகி இருந்தால் அல்லது இவாறான மோசடிகள் பற்றி தெரிந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் பணம் வைப்பு செய்யப்பட்ட/ வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.