நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது இதன்படி இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் 305/ரூபாவாக விற்கப்படும் இவ் அறிவித்தலை இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் வெளியிட்டுள்ளது
அதேவேளை தொழிற்துறைகளுக்கு பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் 464 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை 134 ரூபாவால் குறைக்கப்பட்டு 330 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இவ் இரண்டு விலைகள் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளன ஏனையவை எரிபொருட்களுக்கான விலைகள் ஏதும் குறைக்கப்படவில்லை