யாழில் ரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு 38 பவுண் நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம், கோப்பாய் உடையன்காடு கிராமத்தில் உள்ள வீடொன்றில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் என இருவர் புகுந்து வயோதிப தம்பதிகளை ஏமாற்றி 38 பவுண் நகைகள் திருடிச் சென்றதாக கோப்பாய் பொலிஸாருக்கு நேற்று (28) முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.