வீதியால் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற இராணுவத்தினர்

கண்டி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இரு இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை அறுத்து சென்ற நிலையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமிலும் ஒன்றிலும் மற்றையவர் கண்டி இராணுவ முகாமிலும் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தலத்துஓயா பகுதியைச் சேர்ந்த பெண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணின் நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.