தேர்தலுக்கான திகதி குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

தேர்தலுக்கான புதிய திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதற்கமைய தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நாடாத்துவது குறித்து இன்றைய தினம் அதற்குரிய திகதியை தீர்மானிக்கும் வகையில் கூட்டம் ஒன்று கூடவிருந்தது

எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.