பல்கலைகழக பகிடிவதை!! மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் மூத்தவர்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.

டி ப்ரீத்தி, 26, ககாடியா மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி. இந்நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியின் தந்தை முகமது ஷெரீப் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஷெரீப் மற்றும் அவரது நண்பர்கள் மாணவியை ராகிங் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த பிரீத்தி தற்கொலைக்கு முயன்றார்.

ப்ரீத்தியின் செல்போனில் சக மாணவியிடம் ராகிங் நடந்ததற்கான ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மாணவி ப்ரீத்தியின் மரணத்தைக் கண்டித்து அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ககாடியா மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.