பாடசாலை மாணவர்களுக்கான சீறுடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

பாடசாலையின் மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நன்கொடையின் கீழ் இலங்கைக்கு கிடைத்துள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும்.

அதேநேரம் மூன்றாம் தவணை முடிவதற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றார்.