பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள இ.போ.ச ஊழியர்கள்!

இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல்  தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

முகாமையாளரின் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளினால் தாம் தர்மசங்கடத்தில் உள்ளதாக கூறியே அவர்கள் இந்த எதிர்ப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்