அனுமதிப்பத்திரம் இன்றி முல்லைத்தீவுக்கு வரும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத முல்லைத்தீவு பொலிஸாருக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை முல்லைத்தீவு வீதி ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பஸ்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.