இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடொன்றில் கைது!

இலங்கையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கடா(ta)’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன ஆகிய 8 சந்தேகநபர்கள் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்று கிடைத்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிப்பை சீசெல்ஸ் – விக்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.