வவுனியாவில் மற்றுமோர் துயர சம்பவம் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடிவதற்கு முன்னர் மாணவன் ஒருவன் தவறான முடிவால் உயிரை மைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

 மருத்துவபீடத்துக்கு தெரிவான  மாணவர்

குறித்த மாணவன் வவுனியாவில் தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் கல்வி கற்று பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு தெரிவாகிய இருந்த நிலையில் நேற்றைய தினமே விபரீத முடிவெடுத்து உயிரை மாயத்துள்ளார்.,

மாணவனின் தந்தை பிரபல வைத்தியர் எனவும் கூறப்படுகின்றது.அத்தோடு மாணவனின் தாய் மாணவன் எதிர்காலத்தில் சிறந்த இருதய சிகிச்சை நிபுணராக தனது மகன் வர வேண்டும் என விரும்புவதாகவும் கூறியிருந்தார் உயிரிழந்த மாணவன் உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்றவராவார்.

மாணவனின் தற்கொலை குறித்த காரணம் தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.