யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக உள் நுழைந்து JCB இயந்திரம் மூலம் வீடொன்றினை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(11.03.2023)இடம்பெற்றுள்ளது.

காணி உறுதி பத்திரம் தொடர்பான பிரச்சினையால் JCB இயந்திரம் மூலம் வீட்டை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

மேலும் வீட்டை உடைக்க பயன்படுத்திய JCB இயந்திரத்தையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றம் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்.