உழவு இயந்திரத்தால் பறிபோன உயிர்; வயல் உழுத இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

கலப்பை கவிழ்ந்ததில் உழவு ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

மட்டக்களப்பு ஐத்தியமலை வயல் பகுதியில் வயல் உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் நேற்று (11) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அய்த்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாச சதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, நேற்று மதியம், குறித்த வயல் உழவு இயந்திரம் மூலம் உழுது கொண்டிருந்த போது, ​​இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தின் பின் சக்கரங்கள் வயலில் புதைந்ததையடுத்து, உழவு இயந்திரத்தின் முன்பகுதி மேலே தூக்கி கவிழ்ந்து கீழே விழுந்து கலப்பையில் தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து பொலிசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அய்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.