சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்படுள்ள சிக்கல்

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதால் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர்  சுமித் உபேசிறி நேற்றைய தினம் காலி – உனவடுன பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் இது குறித்து கூறியுள்ளார்.

அதேவேளை கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை  9.6 வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,184 ஆக பதிவாகியுள்ளது.

அதற்கமைவாக ஜனவரியில் 102,545 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் மொத்தமாக 719,978 சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை பரிசீலிக்கும் போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது