விரைவில் புதிய அமைச்சரவை நிஜமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடன் கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

இருப்பினும் நிதி பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக தற்போதைக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வது பொருத்தமானது அல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசிடம் கூறியுள்ளனர்

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்தது.

பத்து உறுப்பினர்களின் பட்டியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களாக நியமிக்கப்பட இருக்கும் பத்து உறுப்பினர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்த போது அதிலிருந்து பவித்ராதேவி வன்னியாராச்சி மட்டுமே நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாகம் தகவல்கள் கூறுகின்றன.