மக்கள் ஆதரவுடன் மகிந்தவை பிரதமராக்குவோம்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மக்கள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக்குவோம் என சீறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் இன்றைய தினம் மொட்டு கட்சியினர் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை கூறியுள்ளார்.

நாம் மஹிந்தரஜபக்சவை பிரதமார்க்க வேண்டும் என்றால் இலகுவில் அவரை பிரதமராகலாம் ஆனால் நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை . தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார்.

அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்கள் ஆதரவு மூலமே மகிந்தவைப் பிரதமராக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.