யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு வாகன சாரதி தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரியில் இருந்து வந்த டிப்பரும் கொடிகாமத்தில் இருந்து வந்த வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் டிப்பர் வாகன சாரதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.