இலங்கையில் பேருந்து கட்டணம் மற்றும் ஏணைய கட்டணங்கள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், “விலை நிர்ணய முறைப்படி பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.இப்போது போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம்.

ஏனெனில் மாற்று விகிதம் நிலையானதாக இருந்தால், டாலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைந்தால், நமது எரிபொருள் செலவுகள் குறையும்.

இதன் அடிப்படையில் இதர செலவுகளைக் குறைத்த பலனையும் மக்களுக்கு வழங்க முடியும். எனவே இனி வரும் காலங்களில் பஸ் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது,” என்றார்.

Previous articleபிரான்ஸில் சிறப்புத் தள்ளுபடியில் சில பொருள்களை விற்பதற்குத் தடை!
Next articleசிங்கள இளைஞர்கள் தொடர்பில் யாழ். மாணவன் வெளியிட்ட தகவல்!