யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 27 வயதான நபர் !

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
Next articleயாழில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!