சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa abeywardena) தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்றைய தினம் (01-04-2023) காலை இடம்பெறவுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.