மனைவியை கிண்டல் செய்த 17 வயது சிறுவன்!!தட்டிக் கேட்ட கணவனை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!!

தமிழ்நாடு மாவட்டம் கடலூரில் தனது மனைவியை கிண்டல் செய்வதை அறிந்த 17 வயது சிறுவன் கணவனை கத்தியால் குத்திக் கொன்றான்.

கடலூர் மாவட்டம், மணலூர் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு சித்ரா (30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று சித்ரா தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவரை 17 வயது சிறுவன் கிண்டல் செய்தான். சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு சித்ரா இதை தனது கணவர் விஜயகுமாரிடம் தெரிவித்தார். உடனே அந்த வாலிபரிடம் விஜயகுமார் சென்று என் மனைவியை ஏன் கிண்டல் செய்தீர்கள் என்று கேட்டு கோபத்தில் கத்தியால் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பலில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்ப முயன்ற யாழ் இளைஞன் உட்பட 4 பேர் கைது.!!
Next articleபண்டிகைக் காலத்தில் நீண்ட தூர பயணங்களுக்காக 38 மேலதிக தொடரூந்துகள் சேவையில் !