ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் இருந்து உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.