யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (16.04.2023) வேலணை 6ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் யாழ். வேலணை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 52 வயதுடைய இராசதுரை ரமணன் என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த நபர் கிணற்றுப் படுக்கையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.