யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த கார் !

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எனினும் வாகன சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் இருந்து விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்கும் நடவடிக்கையை ஊர்காவத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.