முல்லைத்தீவில் பாம்பு கடிக்கு இலக்காகி 5 பிள்ளைகளின் தந்தை பலி !

பாம்பை கையால் தூக்கும் போது பாம்பு கடித்த சம்பவம் நடந்துள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தின் கிவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார்.

அங்கவீனமுற்ற 5 பிள்ளைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்பவரே உயிரிழந்துள்ளார்.