மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இ்ன்று (25) பிற்பகல் மின்னல் தாக்கி மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார் .

மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்