இலங்கை மக்களுக்கான முக்கிய செய்தி

கொலன்னாவை மாநகர சபை மற்றும் ராஜகிரிய உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (29) 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

கொலன்னாவை நகர சபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல் கோட்டே, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி வரையான பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொலன்னாவை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.