நாட்டில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளும் கடமையில்

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமைக்காக நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.