போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான போலி நாணயத்தாள்களுடன் ஆனையிறவு பகுதியில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து சோதனனையிடும் போது யாழிலிருந்து பளை நோக்கி சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.