யாழ்ப்பாணம் நெடுந்தீவை உலுக்கிய கொலை சம்பவத்திற்க்கான அடையாள அணிவகுப்பு இன்று!

கடந்த மாதம் நெடுந்தீவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்படவுள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
கடந்த மாதம் நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் 100 வயதான மூதாட்டி ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருந்2தார்.

சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முதியவர்களை படுகொலை செய்த நபரை கைது செய்திருந்தனர்.

கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவரை மே 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.