யாழ் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த பொலிஸார் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் திருட்டு

வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமல் சிலர் செல்கின்றனர்.

அதேபோல மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்களை அவதானித்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் அன்றைய தினம் மாலை அல்லது மறுநாள் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் கைவிடப்பட்ட நிலைகளில் பொலிசாரினால் மீட்கப்படுகின்றன.

எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வோர் அதனை பூட்டி பாதுகாப்பாக நிறுத்தி செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.