ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (10-05-2023) பிற்பகல் இயக்கப்படவிருந்த ஐந்து அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அனுராதபுரத்திற்குச் செல்லும் இரவு தபால் ரயிலை தவிர ஏனைய அனைத்து இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரயில்வே திணைக்களம் எடுத்துள்ளது.