இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில் ஜி-7 நாடுகள் வெளியிட்டுள்ள புதிய செய்தி!

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொள்வதாக ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக ஜி-7 உச்சி மாநாட்டின் கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடுத்தர வருமான நாடுகளின் கடன் பிரச்சினைகளை தீர்க்க பலதரப்பு முயற்சிகளுடன் கூடிய வெற்றிகரமான முறைகள், மற்றும் அவைகள் விரைவான தீர்வாகவே தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.