சிலாவத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது!

  சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Previous articleஇலங்கையில் நடமாடும் விபச்சார நிலையத்தை நடாத்தி வந்த நபர்கள் கைது!
Next articleஉலகபிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சாதனை படைத்த இலங்கை தமிழன்